WHO IS READING THIS BLOG JESUS BLESS YOU
Showing posts with label aliyaamal. Show all posts
Showing posts with label aliyaamal. Show all posts

Tuesday, March 31, 2015

தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில்

தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்.

மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்

கோவே, தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்

யாக்கோபைப்போல், போகும் பாதையில் - பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட

தூக்கத்தால் நான் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்

நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா!

பரத்துக்கேறும் படிகள் போலவே – என் பாதை தோன்றப்

பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும்

. நித்திரையினின்று விழித்துக் - காலை எழுந்து

கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;

இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன்

. ஆனந்தமாம் செட்டை விரித்துப் - பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன்.

Friday, January 31, 2014

நம்பி வந்த மனிதர்க்கெல்லாம் நன்மைகள் ஏராளம்


நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்
நன்மைகள் ஏராளம் -- 2
நம்புகிறேன் நம்புகிறேன் 
நம்பத்தக்க தகப்பனே -- 2
நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்
நன்மைகள் ஏராளம் -- 2

1.மனிதரின் சூழ்ச்சியினின்று
மறைத்துக் காத்துக்கொள்வீர் -- 2
நாவுகளின் சண்டைகள் அவதூறு பேச்சுகள்
அணுகாமல் காப்பாற்றுவீர் -- 2

நம்புகிறேன் நம்புகிறேன் 
நம்பத்தக்க தகப்பனே -- 2
நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்
நன்மைகள் ஏராளம் -- 2

2.என் பெலன் நீர்தானே
கேடகமும் நீர்தானே
சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
பாட்டினால் உம்மைத் துதிப்பேன்

நம்புகிறேன் நம்புகிறேன் 
நம்பத்தக்க தகப்பனே -- 2
நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்
நன்மைகள் ஏராளம் -- 2

3.கானானிய பெண் ஒருத்தி
கத்திக்கொண்டே பின்தொடர்ந்தாள்
அம்மா உன் விசுவாசம் பெரியது என்று
பாராட்டி புதுமை செய்தீர்

நம்புகிறேன் நம்புகிறேன் 
நம்பத்தக்க தகப்பனே -- 2
நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்
நன்மைகள் ஏராளம் -- 2

.

Blog Archive