WHO IS READING THIS BLOG JESUS BLESS YOU
Showing posts with label இரகசியம். Show all posts
Showing posts with label இரகசியம். Show all posts

Monday, February 22, 2016

உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 11

நவீன உலகில் எங்கு பார்த்தாலும் பெய்யும் போலியான அன்பும் நடிப்பும் நயவஞ்சகம் விபசாரம்,வேசித்தனம், கொலைவெறியர்,காம வெறியர் ,பண வெறியர்,என எல்லாரும் வெறிபிடித்து  அலைகின்றனர் அனைவர் உள்ளத்திலும் கடவுள் ஒருவர் இருக்கின்றாரா?ஏன் அவர் இதை எல்லாம் பார்த்து  கொண்டிருகிறார். என்ற எண்ணம் தோன்றுவது இயற்கையே .நாம் கலியுகத்தின் மத்தியபகுதியில் வாழ்ந்து வருகிறோம். என்பதிற்கு இத்தகைய நிகழ்வுகள் மிக பெரிய  சான்றாக அமைகின்றது .இறுதி கால மக்கள் எப்படி இருப்பார்கள் என்று வானத்தையும் பூமியை யும் தனது வாயின் வார்த்தையால் உருவாகிய ஒரேஒரு மெய் தெய்வம் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே எழதி கொடுத்துள்ளார்.வரும் ஆபத்துகளில் இருந்து தப்பிக்க வேண்டிய ஒரே ஒரு வழியையும் வேதாகமத்தில் காட்டியுள்ளார்.உலகில் வாழும் எந்த மனிதனாலும்  எந்த நாட்டை சேர்ந்தவனாய் இருந்தாலும் அவர்கள் முன் இரண்டு தெரிவுகள் உள்ளது .

1) வானத்தையும் பூமியையும் படைத்த  ஒரே மெய்யான தெய்வம்  இயேசுவை பின்பற்றுவது (நிலை  வாழ்வு தருவது )
2) ஒரு உலக கூட்டாட்சியான சர்வாதிகாரி சொல்லும் உலக பொது மதத்தை   பின்பற்றுவது (நித்ய அழிவு )

இந்த இரண்டில் வாழ்வா ? சாவா?  எந்த தெரிவை பின்பற்றுவது என்பது ஒருவரது தனிபட்ட விருபத்துக்கு  ஒரே மெய்யான தெய்வம் இயேசு விட்டுள்ளார் . 

1வது தெரிவை நீங்கள் தெரிந்தால் இந்த உலகத்தில்   நீங்கள் கடும் உபத்திர்த்தையும் ,கடும் ஆபத்தையும் ,கடும் அவமானத்தையும் ஏன்  உங்கள் உயிரையும்  இயேசுக்காக விட வேண்டி வரும் என வேத வசனம் முன் உரைக்கிறது  ஆனால் உங்களுக்கு  நிலை  வாழ்வு கிடைப்பது  உறுதி  பரலோகத்தில் காண்க
"வெளிப்படுத்துதல் 12:11 
 நமது சகோதரர்கள் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தாலும், தங்கள் சாட்சியின் வசனத்தாலும் சாத்தானை வென்றார்கள். அவர்கள் தம் வாழ்வைக் கூட அதிகம் நேசிக்கவில்லை. அவர்கள் மரணத்துக்கும் அஞ்சவில்லை."


2வது தெரிவை நீங்கள் தெரிந்தால் இந்த உலகத்தில் உங்களது ஆயுட்காலம் முழுவதும் சகலவிதமான  உலக சுகபோகங்கள் அனைத்தையும் நீங்கள் அனுபவிக்கலாம் .ஆனால் இரண்டு  நிபந்தனையை நீங்கள் கட்டாயம் நிறை வேற்றியே ஆக வேண்டும்.



நிபந்தனை 01) காலை ,மதியம்,  மாலை மூவேளையும் நீங்கள் உலகத்தின் எங்கு நின்றாலும் ஒரு சிலை உள்ள திசை நோக்கி விழுந்து வணங்க வேண்டும் .அத்துடன் அவர்கள் சொல்லும் ஒரு மந்திரத்தை சொல்லி  சொல்லி வணங்க  வேண்டியது  ஒவொரு தனி மனிதனும் கட்டாயம் செய்ய  வேண்டும் இல்லையேல் நீங்கள் கொள்ள படுவது உறதி ( இந்த நடைமுறை ஏற்கனவே ஒரு மதத்தில் நடைமுறையில் உள்ளது )

காணக 
வெளிப்படுத்துதல் 12 :14
    14. மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.

    15. மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது.


நிபந்தனை 02)  உங்களது நடவடிக்கையை எந்தநேரமும்  கண்காணிக்க ஒரு முத்திரையை உங்களது உடலில் பதித்தால் மாத்திரமே 7 ஆண்டுகள் ஒரு உலக கூட்டாட்சியான சர்வாதிகார ஆட்சியில் சகலவிதமான  உலக சுகபோகங்கள் அனைத்தையும் நீங்கள் அனுபவிக்கலாம். 

ஆனால் இந்த உலக வாழ்க்கை முடிந்த பின் சாத்தானுடன் மற்றும் அவனுடைய கள்ள தீர்கதரிசியுடன் நித்திய அக்னியில் பரலோகத்தில்  வதை கபடுவது உறுதி 
இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.  
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்

உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 01


உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 03

உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 05


Tuesday, February 16, 2016

பைபிள்இல் ஆபாசம் உள்ளது

பைபிள் ஆபாசம் உள்ளது என்று விவாதிக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு பரிசுத்த வேத வசனங்களில் இருந்து பதில்.

Wednesday, February 10, 2016

6 வயது முதல் ஆபாசப் பத்திரிகைக்கு அடிமையாகி எனது வாழ்க்கையை சீரழித்தேன்

இணைத்தள ஆபாசத்திலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றி அவர்களது எதிர்காலத்தை சிறப்பாக கட்டமைக்க உதவ வேண்டுமென 6 வயது முதல் ஆபாசப் பத்திரிகைக்கு அடிமையாகி பெரும் சீரழிவை சந்தித்த அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த லிஸ் வோக்கர் என்ற பெண் தெரிவித்துள்ளார்.

தற்போது இவருக்கு 42 வயதாகிறது. 3 குழந்தைகளுக்குத் தாய் இவர். சிறு வயது முதலே ஆபாசப் படம் பார்ப்பதற்கு அடிமையானவர் இவர். தற்போது அதிலிருந்து அவர் மீண்டுள்ளார். ஆனால் இத்தனை காலமாக தான் பட்ட மனக்கஷ்டத்தை அவர் பகிரங்கமாக பகிர்ந்துள்ளார்.
தான் பட்ட கஷ்டம் சொல்லில் வடிக்க முடியாதது என்று கூறியுள்ள லிஸ், இதிலிருந்து மீள தான் ஒரு பெரிய போராட்டத்தையே நடத்த வேண்டியிருந்ததாகவும் விவரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
இன்று இணைத்தில் அத்தனையும் கொட்டிக் கிடக்கிறது. இது குழந்தைகளுக்கு பெரும் அபாயமாக வந்திருக்கிறது. இதை சுட்டிக் காட்டி, எப்படி இணையத்தில் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது பற்றி Not For Kids! என்ற நூலை எழுதியுள்ளேன்.
6 வயது முதல் நான் ஆபாசப் படம் பார்க்க ஆரம்பித்தேன். அதற்கு அடிமையாகிப் போனேன். ஆனால் அது எனது வாழ்க்கையை அழித்து விட்டது.
என்னை மன உளைச்சலுக்குள்ளாக்கி விட்டது. மன ரீதியாக நான் கடுமையாக பாதிக்கப்பட்டேன் என்று கூறியுள்ளார் .
நான் 6 வயதாக இருந்தபோது எனது பாடசாலை பேருந்தில், எனக்குப் பக்கத்தில் இருந்த என்னை விட மூத்த மாணவியிடமிருந்து ஆபாசப் பத்திரிகை குறித்த அறிமுகம் கிடைத்தது. அது ஒரு கிராபிக்ஸ் படங்களுடன் கூடிய ஆபாச பத்திரிகை.
அந்தப் புத்தகத்தை தனது அண்ணனின் படுக்கைக்குக் கீழிருந்து தான் எடுத்ததாக அவள் என்னிடம் சொன்னாள். அதுதான் நான் முதலில் பார்த்த, படித்த ஆபாசப் பத்திரிகை.
அதன் பின்னர் நான் தினசரி ஆபாசப் படம் பார்க்க ஆரம்பித்தேன். தினசரி காலையில் அதைப் பார்த்தால்தான் திருப்தி என்ற நிலைக்கு வந்தேன். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பார்க்க ஆரம்பித்தேன்.
எனது செக்ஸ் குறித்த ஆர்வம் கட்டுக்கடங்காமல் போனது. 12 வயதில் நான் கன்னித்தன்மையை இழந்தேன். மது விருந்து, செக்ஸ், ஆபாசக் கதைகள் என தடம் மாறினேன்.
20 வயதுக்குள்ளேயே கிட்டத்தட்ட அத்தனை கெட்ட பழக்கங்களையும் பழகி விட்டேன். போதைப் பொருள் பழக்கமும் என்னைத் தொற்றிக் கொண்டது. இதனால் உடல் நலம், மன நலம் பாதிக்கப்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கும் சென்று வந்தேன்.
இப்படி 6 வயது முதல் ஆபாசப் படத்திற்கு அடிமையாகி பெரும் சீரழிவை சந்தித்த எனக்கு வாழ்க்கையே அழிந்து விட்டது, சலித்துப் போய் விட்டது.
இப்போது நான் மீண்டு வந்துள்ளேன். இளைஞர்கள் மத்தியில் ஆபாசப் படத்தால் ஏற்படும் அபாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.
 
இன்று இணையத்தளத்தில் அத்தனையும் கொட்டிக் கிடக்கிறது. இது குழந்தைகளுக்கு பெரும் அபாயமாக வந்திருக்கிறது. இதை சுட்டிக் காட்டி, எப்படி இணையத்தளத்தில் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது விவரித்து Not For Kids! என்ற நூலை எழுதியுள்ளேன்.
இணையத்தள ஆபாசத்திலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டியது அவசியம். முக்கியம். அது அவர்களது எதிர்காலத்தை சிறப்பாக கட்டமைக்க உதவும். நாம்தான் அதைச் செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆபாச இணையத்தில் அடிமையாக இருந்து மீண்ட வேறு ஒரு பெண்ணின் சாட்சி காண்க

சுமார் 7 வருடங்களாய் ஆபாச வெறிப்பிடித்து அலைந்த நான்


Tuesday, January 12, 2016

Tuesday, December 29, 2015

Thursday, October 22, 2015

Wednesday, October 21, 2015

வஞ்சனையின் காலம் வந்து விட்டது

வஞ்சனையின் காலம் வந்து விட்டது மிகவும் எச்சரிக்கையாக இருங்க்கள்  

Monday, October 19, 2015

எனது செபத்திற்கு பதில் கிடைக்குமா ?

ஏன்  எனது செபத்திற்கு இவ்வளவு காலம் பதில் கிடைக்கவில்லை ? ஒருவேளை நான் பெரும் பாவம் செதுய்து விட்டேனோ என்று புலம்புகின்றீர்களா ? கவலையை இன்றே விட்டு விடுங்கள் நிச்சயம் பதில் கிடைக்கும்

Sunday, August 23, 2015

காமுகர்கள் சமூக வலைத்தளங்களை பாவித்து எப்படி சிறுமிகளை தந்திரமாக பிடிக்கின்றனர்?

காமுகர்கள் சமூக வலைத்தளங்களை பாவித்து எப்படி சிறுமிகளை தந்திரமாக பிடிக்கின்றனர் 15 வயதை உடைய  போலியான முக நூல் கணக்கை ஆரம்பித்து இந்த கணக்கின்  ஊடாக 3 சிறுமிகளை தொடர்பு  கொண்டு இதனை அவர்களது  பெறோருக்கு தெரியபடுத்தி  4 நாட்கள் அவர்களுடன் போலியான முக நூல் கணக்கின்  ஊடாக  தொடர்பில் இருந்து  இன்று அவர்களை நேரடியாக சந்தித்து உண்மையை உணர்த்த படுகிறது இந்த காணொளி பலருக்கு உண்மையை உணர்த்தவும்  விழிபுணர்வு ஏற்படுத்தவும் உதவும் காணொளி பாருங்கள் உங்கள் பிள்ளைகளை  இப்படிபட்ட காமுகர்கள்ளிடம் இருந்து பாது காருங்கள் 

இது  தொடர்பான இன்னொரு பதிவு
மோபைல் போனை பார்த்தால் 13 வயது மகள் விபச்சாரி என்பது புரிந்தது: தந்தையின் திடுக்கிடும்

Friday, August 7, 2015

மோபைல் போனை பார்த்தால் 13 வயது மகள் விபச்சாரி என்பது புரிந்தது: தந்தையின் திடுக்கிடும்..


சீனாவில் நடந்த TV நிகழ்ச்சி ஒன்றில் , ஒரு தந்தை கதறி அழுத விதம் அனைவரையும் மனம் உருகச் செய்துள்ளது. மகள் குளிக்கச் சென்றவேளை எதேட்சையாக அவளவு மோபைல் போனை எடுத்துப் பார்த்தால் அங்கே பல எஸ்.எம்.எஸ் இருந்துள்ளது. அதில் அந்த 13 வயதுச் சிறுமி , நான் ஒரு ராத்திரிக்கு 3,000 (சீன நாட்டு காசு) கேட்டேன் அவர் தருவாரா என்று கேட்க்க. இல்லை இல்லை எப்படி தருவார் ? நீ ஒரு ராத்திரிக்கு படுக்க 2,000 வாங்கும் விடையம் எனது பாசுக்கு தெரியும். ஆகையால் நீ 2000 வாங்கிக் கொண்டு அவரோடு உறவு கொள் என்று , விபச்சார கும்பல் தலைவன் ரெக்ஸ் போட்டுள்ளான்.
இதனை வாசித்த தந்தை அதிர்ந்து போனார் ... என்ன நடக்கிறது என்று மகளிடம் கேட்டால். ஆம் எனக்கு பணம் தேவை. நான் அதனால் இந்த தொழிலில் இறங்கிவிட்டேன் என்று அவர் சற்றும் கூசாமல் சொல்லியுள்ளார். இதனை என்னல் எப்படி தாங்கிக் கொள்ள முடியும் என்று கேட்டு அந்த தந்தை கதறி அழுதுள்ளார். சிறுவர்களையும் , சிறுமிகளையும் செக்ஸ் அடிமைகளாக்கி அவர்களை வைத்து காசு சம்பாதிக்கும் கூட்டம் அதிகமாக இருக்கும் நாடுகளில் சீனாவும் ஒன்றாகும்
எச்சரிக்கை  சாத்தனின்  குறி சிறு குழந்தைகள் 

Tuesday, August 4, 2015

Monday, May 18, 2015

ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தை ஆசீர்வாதம் செய்வதில் எந்த தடையும் இல்லை

ஓரே இனத்தை சேர்ந்தவர்களின் திருமணத்தை ஆசீர்வாதம் செய்வதில் எந்த தடையும் இல்லை என பிரான்ஸ் நாட்டு பெண்டகோஸ்டல் தேவாலயங்கள் அமைப்பு தற்போது அனுமதி வழங்கியுள்ளது.
ஓரினச்சேர்க்கையாளர்களின்(Gays&Lesbians) திருமணத்திற்கு திருச்சபை பாதிரியார்கள் ஆசீர்வாதம் அளிக்க கூடாது என்ற நடைமுறை சில வருடங்களாக வழக்கத்தில் இருந்துள்ளது.
இந்த நடைமுறைக்கு எதிராக ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தை ஆசீர்வாதம் செய்த மதகுரு ஒருவரின் பதவியும் சமீபத்தில் பறிக்கப்பட்டது.
இந்நிலையில், ஒரே இனத்தை சேர்ந்தவர்களின் திருமணத்தை மதகுருமார்கள் ஆசீர்வாதிக்கலாமா என்று கருத்து கேட்டு சமீபத்தில் வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது.
Union of Protestant Churches in France" (EPUdF) என்ற அமைப்பை சேர்ந்த 100 முக்கிய பிரதிநிதிகளிடம் நடத்திய இந்த வாக்கெடுப்பில், சுமார் 94 பேர் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தை ஆசீர்வாதிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த வாக்கெடுப்பிற்கு ஆதரவு தராதவர்களை திருச்சபை குருமார்கள் கட்டாயப்படுத்த மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரோட்டஸ்டண்ட் தேவாலயத்தின் இந்த அனுமதி, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Alex Rohne என்பவர் கூறுகையில், சில இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் மற்றும் நாசிசவாதிகள் போல் ஓரினச்சேர்க்கையாளர்களை கீழ்தரமாக நடத்திவந்த சூழ்நிலை தற்போது மாறியுள்ளது.
திருச்சபைகளின் இந்த நடவடிக்கை ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்திருக்கிறது என்றார்.
ஐயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து நாடுகளும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக வாக்கெடுப்பு நடத்த உள்ள நிலையில், பிரான்ஸ் புரோட்டஸ்டண்ட் தேவாலயங்கள் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
பிரான்ஸ் நாட்டிலேயே 1,10,000 உறுப்பினர்களுடன் சுமார் 4,00,000 கத்தோலிக்கர்கள் புரோட்டஸ்டண்ட் தேவாலயங்களின் நம்பிக்கையை பின்பற்றுவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விளக்கமான பதிவு காண்க 

உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 09

Monday, May 11, 2015

Thursday, March 12, 2015

சுமார் 7 வருடங்களாய் ஆபாச வெறிப்பிடித்து அலைந்த நான்

பிரித்தானியாவில் வாழும் பெண் ஒருவர் தான் ஆபாச படங்களுக்கு அடிமையானது குறித்து பரபரப்பான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
பிரித்தானியாவில் ஓகோசா ஓவியன்ரியோபா(Oghosa Ovienrioba Age-22) என்ற தென் ஆப்பிரிக்க வம்சாவளி பெண் வசித்து வருகிறார்.

தற்போது கிறிஸ்துவராய் மாறியுள்ள இப்பெண், தான் இளமை காலத்தில் ஆபாச படங்களுக்கு அடிமையானது குறித்து யூடியூப்பில் பேட்டியளித்துள்ளார்.

அவர் பேசியதாவது, நான் 14 வயதிலிருந்தபோதே ஆபாச படங்களை பார்க்க தொடங்கிவிட்டேன்.

எப்போதும் என் அறையில் விளக்கை அணைத்து இருளில் ஆபாசத்தை ரசித்து வந்தேன்.

இவ்வாறு நான் இருந்ததால், எனக்கு பார்க்கும் நபர்கள் மீதெல்லாம் பாலியல் ஆசை ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் என் ஆசை எனது எல்லையை மீறி செல்லவும் ஆரம்பித்துவிட்டது. இதனால் நான் பெரும் அவதிக்குள்ளானேன்.

இதன்பின் இவ்விடயம் தொடர்பாக நான் என் தோழியிடம் பேசினேன். அவள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறுமாறு என்னிடம் கூறினாள்.

அதன்படியே மதம்மாறிய நான் பைபிளை படிக்க தொடங்கியது முதல், என்னிடம் இருந்த வக்கிர எண்ணங்கள் என்னை விட்டு விலகி சென்றது.

சுமார் 7 வருடங்களாய் ஆபாச வெறிப்பிடித்து அலைந்த நான், தற்போது முற்றிலுமாக மாறியதில் மகிழ்ச்சியடைகிறேன் என ஆனந்த கண்ணீருடன் பேட்டியளித்துள்ளார்.

.

Blog Archive